தேன்கனிக்கோட்டை, பிப்.20: கெலமங்கலம் வட்டாரத்தில், வேளாண்மை துறை அட்மா திட்டத்தின் கீழ், ஜெக்கேரி கிராமத்தில் விதை சான்றளிப்புக்கான வழிமுறைகள் குறித்து விவசாயிகளுக்கு ஒருநாள் பயிற்சி நடைபெற்றது. பயிற்சிக்கு வேளாண்மை உதவி இயக்குநர் ஜான் லூர்து சேவியர் தலைமை தாங்கி, வேளாண்மை துறை மூலம் செயல்படுத்தப்படும் மானிய திட்டம் குறித்து விளக்கினார். விதை சான்று அலுவலர் சரவணன், உதவி விதை அலுவலர் அருள்கணேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விதை சான்று அலுவலர் சரவணன், சான்றளிப்புக்கான வழிமுறைகள் குறித்து விளக்கினார். உதவி வேளாண்மை அலுவலர் முனிராஜ் மானிய திட்டங்கள் குறித்து விளக்கி கூறினார். வட்டார தொழில்நுட்ப மேலாளர் கீதா, விதை நேர்த்தி குறித்து செயல் விளக்கமாக, ஒரு கிலோ ராகி விதைக்கு 4 கிராம் டிவிரிடி, 10 கிராம் சூடோமோனாஸ் உடன் ஆற வைத்த அரிசி கஞ்சி கலந்து, விதைப்பதற்கு ஒரு நாள் முன்னதாக விதை நேர்த்தி செய்து பயன்படுத்த வேண்டும் என செயல்விளக்கம் செய்து காட்டினார். இப்பயிற்சியில் 40க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.
கெலமங்கலம் வட்டாரத்தில் விதை சான்று, பண்ணை அமைத்தல் குறித்து பயிற்சி
- கெலமங்கலம் மாவட்டம்
- Thenkanikottai
- ஜெக்கேரி
- விவசாய துறை
- உதவி வேளாண் இயக்குநர்
- ஜான் லூர்ட்ஸ் சேவியர்
- வேளாண் துறை…
