2 நாள் நடந்த தட்டச்சு தேர்வினை 907 மாணவ, மாணவிகள் எழுதினர்

கிருஷ்ணகிரி, பிப்.16: கிருஷ்ணகிரியில் இரண்டு நாட்கள் நடந்த தட்டச்சு தேர்வினை 907 மாணவ, மாணவிகள் எழுதினர். கிருஷ்ணகிரி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில், கடந்த 2 நாட்களாக தட்டச்சு தேர்வுகள் நடைபெற்றது. இதில், ஆங்கிலம், தமிழ், இளநிலை, முதுநிலை மற்றும் உயர்வேகத் தேர்வு ஆகிய பாடங்களில், தட்டச்சு தேர்வுகள் நடந்தது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து வணிகவியல் தட்டச்சு பள்ளிகளில் இருந்து, முதல் நாளில் 593 பேரும், இரண்டாவது நாளான நேற்று 314 பேரும் என மொத்தம், 907 மாணவ, மாணவிகள் தேர்வை எழுதினர்.

தேர்வுகளை முதன்மை கண்காணிப்பாளர் சண்முகப்பிரியா மேற்பார்வையில், கூடுதல் முதன்மை கண்காணிப்பாளர்கள் ராஜசேகர், கிருத்திகா மற்றும் ஆசிரியர்கள் முன்னிலையில் தட்டச்சு தேர்வுகள் நடந்தது. இத்தேர்வுகளை பறக்கும்படையினர் காணொளி காட்சி மூலமாகவும், நேரில் சென்றும் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

 

Related Stories: