காலிபிளவர் கிலோ ரூ.40க்கு விற்பனை

காவேரிப்பட்டணம், பிப்.16: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காலிபிளவர் விளைச்சல் அதிகரித்துள்ள நிலையில், காவேரிப்பட்டணம் வாரச்சந்தையில் நேற்று காலிபிளவர் கிலோ ரூ.40க்கு விற்கப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சூளகிரி, பேரிகை, தளி, ராயக்கோட்டை, கெலமங்கலம், தேன்கனிக்கோட்டை, ஓசூர் மற்றும் காவேரிப்பட்டணம் உள்ளிட்ட கிராமப்புறங்களில் விவசாயிகள் அதிகளவில் காலிபிளவர் சாகுபடி செய்து வருகின்றனர். கடந்த இரண்டு வாரங்களாக பனிப்பொழிவு அதிகரித்ததால் காலிபிளவர் உற்பத்தி தற்காலிகமாக குறைந்திருந்தது.

இதனால் மாவட்டத்தின் அனைத்து சந்தைகள், வாரச்சந்தைகளுக்கு காலிபிளவர் வரத்து சற்று குறைந்தது. தற்போது, காலிபிளவர் விளைச்சல் கணிசமாக உயர்ந்துள்ளது. அறுவடையை துவக்கிய விவசாயிகள், பிரதோஷம், மகா சிவராத்திரியை முன்னிட்டு, இறைச்சியை மக்கள் தவிர்த்ததால் காலிபிளவர், காளான் விற்பனை அதிகரித்தது. இதனால் சந்தைக்கு வழக்கத்தை காட்டிலும் அதிகம் விற்பனைக்கு வந்திருந்தது. காவேரிப்பட்டணம் வாரச்சந்தையில் காலிபிளவர் கிலோ ரூ.40க்கு விற்பனையானது.

 

Related Stories: