இங்கிலாந்து: பொதுவாழ்க்கையில் முறைகேட்டில் ஈட்டுபட்டதாக குற்றம்சாட்டி ஆண்ட்ரூவை கைது செய்தது தேம்ஸ் பள்ளத்தாக்கு போலீஸ். இங்கிலாந்தின் வர்த்தக தூதுவராக இருந்தபோது சிறார் பாலியல் குற்றவாளி எப்ஸ்டீனுடன் தொடர்பில் இருந்ததாக ஆண்ட்ரூ கைது செய்தனர். முக்கியமான அரசு ஆவணங்களை எப்ஸ்டீனிடம் வழங்கியதாக ஆண்ட்ரூ மீது குற்றச்சாட்டு. எப்ஸ்டீன் விவகாரத்தில் சிக்கியதை அடுத்து ஆண்ட்ரூவின் இளவரசர் பதவி பறிக்கப்பட்டது.
66வது பிறந்தநாளை கொண்டாட இருந்த நிலையில் ஆண்ட்ரூவை பிரிட்டன் போலீஸ் கைது செய்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பிரிட்டனில் உள்ள சான்ரிங்காம் அரண்மனையில் முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ மவுன்ட்பேட்டன் அதிரடியாக கைது செய்தனர். தீவிர விசாரணைக்குப் பின் ஆண்ட்ரூவை கைது செய்துள்ளதாக காவல்துறை அதிகாரி ஆலிவர் ரைட் தகவல் தெரிவித்துள்ளார். பிரிட்டன் இளவரசராக இருந்த ஒருவர் கைது செய்யப்படுவது இதுவே முதல்முறை ஆகும்.
பிரிட்டன் மன்னர் சார்லஸின் தம்பியும், முன்னாள் இளவரசருமான ஆண்ட்ரூ, இன்று தனது 66-வது பிறந்தநாளில் ‘பொதுப் பதவியில் முறையற்ற நடத்தை என்ற சந்தேகத்தின் அடிப்படையில் காவல்துறையினரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். மறைந்த பாலியல் குற்றவாளி ஜெப்ரி எப்ஸ்டீனுடனான அவரது தொடர்பு குறித்த புதிய ஆதாரங்கள் வெளியானதைத் தொடர்ந்து இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நார்போக்கில் உள்ள சாண்ட்ரிங்ஹாம் எஸ்டேட்டில் தங்கியிருந்த ஆண்ட்ரூவை, இன்று அதிகாலை தேம்ஸ் வேலி போலீசார் கைது செய்தனர்.
கைது நடவடிக்கையைத் தொடர்ந்து, அவருக்குச் சொந்தமான விண்ட்சர் மற்றும் சாண்ட்ரிங்ஹாம் இல்லங்களில் போலீசார் தீவிர சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த 2010-ம் ஆண்டு பிரிட்டனின் வர்த்தகத் தூதராக இருந்தபோது, ரகசிய அரசு ஆவணங்களை ஜெப்ரி எப்ஸ்டீனுக்குப் பகிர்ந்து கொண்டதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
சமீபத்தில் அமெரிக்க நீதித்துறையால் வெளியிடப்பட்ட 30 லட்சம் பக்கங்கள் கொண்ட ‘எப்ஸ்டீன் கோப்புகளில்’ ஆண்ட்ரூ அனுப்பிய ரகசிய மின்னஞ்சல்கள் சிக்கின. இதில் ஆசிய நாடுகளுக்கான வர்த்தகப் பயணங்கள் குறித்த ரகசியத் தகவல்களை அவர் எப்ஸ்டீனுடன் பகிர்ந்து கொண்டது உறுதியானது. “சட்டத்திற்கு முன் அனைவரும் சமம்” என பிரிட்டன் பிரதமர் கீர் ஸ்டார்மர் இந்த விவகாரம் குறித்துக் கருத்து தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரத்தில் மன்னர் சார்லஸ் III மற்றும் இளவரசர் வில்லியம் ஆகியோர் கடும் அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுகிறது. ஏற்கெனவே கடந்த ஆண்டு ஆண்ட்ரூவின் அரச பட்டங்கள் பறிக்கப்பட்ட நிலையில், “காவல்துறையின் விசாரணைக்குத் தேவையான அனைத்து ஒத்துழைப்பையும் வழங்கத் தயார்” என பக்கிங்ஹாம் அரண்மனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. பிறந்தநாளில் நிகழ்ந்த இந்த கைது நடவடிக்கை பிரிட்டன் அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.
