திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் மதுபான பார்கள் திறந்திருக்கும் நேரம் நள்ளிரவு 12 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 2016ல் 29 பார்கள் மட்டுமே இருந்த கேரளாவில், கடந்த 10 ஆண்டுகளில் மதுபான பார்கள் எண்ணிக்கை 884 ஆக உயர்ந்துள்ளது. கேரளாவில் மதுபான பார்கள் திறந்திருக்கும் நேரம் இரவு 10 மணி வரை இருந்த நிலையில் மேலும் 2 மணி நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. சுற்றுலா தலங்களில் மட்டும் அனுமதிக்கப்பட்டிருந்த காலநீட்டிப்பு தற்போது மாநிலம் முழுவதும் பரவலாக்கப்பட்டுள்ளது. மதுபான பார்கள் திறந்திருக்கும் நேரம் நீட்டிக்கப்பட்டதற்கு எதிர்க்கட்சிகள், சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
