அமராவதி: ஆந்திர மாநிலம் பாலநாடு பகுதியில் இன்று(பிப்.19) அதிகாலை 2.33 மணிக்கு நில அதிர்வு ஏற்பட்டதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3.5ஆக பதிவு; பாலநாடு -வினுகொண்டாவிலிருந்து 20கி.மீ. தொலைவில் 10கி.மீ. ஆழத்தில் நிலஅதிர்வு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பாலநாடு பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
