சிறுமிகளின் பைஜாமாவை பிடித்து இழுப்பது பாலியல் துன்புறுத்தலே: உச்சநீதிமன்றம் தீா்ப்பு

டெல்லி: சிறுமிகளின் பைஜாமாவை பிடித்து இழுப்பது பாலியல் துன்புறுத்தலே என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பைஜாமாவை இழுப்பது பாலியல் துன்புறுத்தலுக்கான முன்னோட்ட நடவடிக்கை மட்டுமே என அகமதாபாத் ஐகோர்ட் தீர்ப்பளித்துள்ளது. அகமதாபாத் உயர்நீதிமன்றம் பிறப்பித்த சர்ச்சைக்குரிய தீர்ப்பை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2021ம் ஆண்டு உத்தரப் பிரதேசத்தில் 14 வயது சிறுமியின் பைஜாமா நாடாவை இருவர் இழுக்க முயன்ற வழக்கு. பைஜாமா நாடாவை இழுப்பது பாலியல் குற்றத்தின் கீழ் வராது என்ற அகமதாபாத் ஐகோர்ட்டின் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

Related Stories: