ஒன்றிய அரசுக்கு காங்கிரஸ் எச்சரிக்கை ராணுவ வீரர்களுக்கான ஊனமுற்றோர் பென்சனை வரி வரம்பிற்குள் கொண்டு வந்தால் போராட்டம்

புதுடெல்லி: ராணுவ வீரர்களின் ஊனமுற்றோர் ஓய்வூதியத்தைக் வருமான வரி வரம்பிற்குள் கொண்டுவரும் திட்டத்தை இந்த மாத இறுதிக்குள் அரசாங்கம் திரும்பப் பெறாவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என்று காங்கிரஸ் எச்சரித்துள்ளது. காங்கிசின் முன்னாள் ராணுவ வீரர்கள் துறைத் தலைவர் கர்னல் ரோஹித் சவுத்ரி (ஓய்வு) கூறியதாவது: போரில் காயங்கள் காரணமாக பணியிலிருந்து வெளியேறும் வீரர்களின் ஊனமுற்ற ஓய்வூதியம் மட்டுமே வருமான வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படும் என்று மோடி அரசு கூறுகிறது. அதே நேரத்தில், காயமடைந்த நிலையிலும் ராணுவத்தில் தொடர்ந்து பணியாற்றும் வீரர்களின் ஊனமுற்ற ஓய்வூதியம் வரியில் விலக்கு அளிக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டது. வீரர்களுக்கான ஊனமுற்றோர் ஓய்வூதியத்தை வருமான வரி வரம்பிற்குள் கொண்டு வரும் திட்டத்தை இந்த மாதத்திற்குள் திரும்ப பெறாவிட்டால் அரசை கண்டித்து மிக பெரிய போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: