சபரிமலை தங்கம் திருட்டு வழக்கு தந்திரி கண்டரர் ராஜீவரருக்கு ஜாமீன்

திருவனந்தபுரம்: சபரிமலை தங்கம் திருட்டு வழக்கில் மூத்த தந்திரி கண்டரர் ராஜீவரர் கடந்த மாதம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இவர் மீது 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்நிலையில் இந்த வழக்குகளில் இருந்து ஜாமீன் கோரி தந்திரி கொல்லம் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். தந்திரி கண்டரர் ராஜீவரருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து கைதாகி 41 நாட்களுக்குப் பின்னர் இவர் நேற்று ஜாமீனில் வெளியே வந்தார். இவருடன் சேர்த்து இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 6 பேருக்கு இதுவரை ஜாமீன் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Related Stories: