×

கொடுங்குற்ற வழக்குகளில் தண்டனையை குறைத்து இழப்பீட்டை அதிகப்படுத்தும் போக்குக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்

டெல்லி: கொடுங்குற்ற வழக்குகளில் தண்டனையை குறைத்து இழப்பீட்டை அதிகப்படுத்தும் போக்குக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்டோருக்கான இழப்பீடு, குற்றவாளிகளுக்கு வழங்கும் தண்டனைக்கு ஈடாகாது. குற்றவாளிகள் பணம் செலுத்தி தண்டனையில் இருந்து தப்பித்து விடலாம் என்ற தவறான செய்தி சமூகத்துக்கு சென்று சேரும் என நீதிபதிகள் ராஜேஷ் பிண்டல், விஜய் கூறினர்.

குற்றத்தின் தீவிரத்துக்கு இணையான தண்டனையை வழங்கப்படுவதை நீதிமன்றங்கள் உறுதி செய்ய வேண்டும். நீதிமன்ற தண்டனை போதுமானதாக இருக்க வேண்டும். மக்களுக்கு சட்டத்தின் மீதான நம்பிக்கையை உறுதிசெய்ய வேண்டும் என நீதிபதிகள் கூறினர்.

2017-ல் நடந்த கொலை முயற்சி வழக்கில் தண்டனையை 2 மாதம் என குறைத்து குற்றவாளிகளுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்த சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ரத்து செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே 2 மாதம் சிறையில் இருந்ததால் அபராதத்தை ரூ.1 லட்சமாக உயர்த்தி குற்றவாளிகளை உயர்நீதிமன்றம் விடுவித்தது.

Tags : Supreme Court ,Delhi ,
× RELATED கலிபோர்னியா மாகாணத்தில் ஏற்பட்ட...