- மேற்கு வங்கம்
- பாபர்
- மசூதி
- வங்காளம்
- பாஜக
- சட்டமன்ற உறுப்பினர்
- சுவேந்து அதிகாரி
- கொல்கத்தா
- ஹுமாயூன் கபீர்
- திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ
- பெல்தங்கா, முர்ஷிதாபாத் மாவட்டம்
- பாபர் மசூதி
- அயோத்தி
- தலைவன்
- மேற்கு வங்க சட்டமன்றம்
கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத் மாவட்டம், பெல்தங்காவில் திரிணாமுல் காங்கிரசில் இருந்து நீக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் ஹூமாயுன் கபீர் அயோத்தி பாபர் மசூதி வடிவத்தில் புதிய மசூதி கட்டி வருகிறார். இந்த நிலையில் மேற்கு வங்க சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும் மூத்த பாஜ தலைவருமான சுவேந்து அதிகாரி நேற்று பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறுகையில், ஹூமாயுன் கட்டி வரும் பாபர் மசூதி கட்டுமான பணிக்கான 50 சதவீதம் தொகை வங்கதேசத்தில் இருந்து வருகிறது.வங்கதேசத்தில் ஜமாத் இ இஸ்லாமி மற்றும் திரிணாமுல் காங்கிரசிற்கும் தொடர்பாக ஹூமாயுன் உள்ளார். சிறுபான்மையினரிடையே மம்தா பானர்ஜிக்கான ஆதரவை அதிகரிப்பதற்கான ரகசிய வேலைகளில் ஹூமாயுன் ஈடுபட்டுள்ளார். இதற்காக ஹூமாயுன் சமீபத்தில் வங்கதேசத்திற்கு சென்று வந்தார் என்றார்.
