×

2வது முறையாக ஈடி விசாரணைக்கு ஆஜராகாத டினா அம்பானி

புதுடெல்லி: ரிலையன்ஸ் குழும நிறுவனங்களை நடத்தி வரும் தொழிலதிபர் அனில் அம்பானி வங்கிகளில் கடன் வாங்கி அதனை பிற பயன்பாட்டுக்கு பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. யெஸ் வங்கி ரூ.2,796 கோடி கடன் வழங்கியது. அதனை அவர் சட்டவிரோதமாக பிற நிறுவனத்துக்கு பயன்படுத்தி உள்ளார். இதே போல் பல ஆயிரம் கோடி அவர் மோசடி செய்துள்ளார். இதுதொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.

அதுமட்டுமின்றி உச்சநீதிமன்றத்திலும் வழக்கு நிலுவையில் உள்ளது. ரிலையன்ஸ் அனில் அம்பானி குழுமத்திற்குச் சொந்தமான ரூ.1,885 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது. அனில் அம்பானி நியூயார்க்கின் மான்ஹாட்டன் பகுதியில் சொகுசு பங்களா வாங்கியதில் நடந்த பண பரிமாற்றம் தொடர்பாக அனில் அம்பானியின் மனைவியும் முன்னாள் நடிகையுமான டினா அம்பானியை 17ம் தேதி(நேற்று) விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது.

ஆனால் அவர் அமலாக்க அலுவலகத்தில் நேற்று ஆஜராகவில்லை. ஏற்கனவே கடந்த 10ம் தேதி ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. அப்போதும் அவர் ஆஜராகவில்லை. இதனால் அவருக்கு புதிய தேதி வழங்கப்படும் என்றும் அவர் விசாரணையில் ஆஜரானால் அவரது வாக்குமூலம் பதிவு செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தார்.

Tags : Tina Ambani ,ED ,New Delhi ,Anil Ambani ,Reliance Group ,
× RELATED ரயில்வே பாதுகாப்பு திட்டங்களுக்கான...