×

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி 3 நாள் திடீர் டெல்லி பயணம்

சென்னை: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி 3 நாள் திடீர் பயணமாக டெல்லி புறப்பட்டு சென்றார். தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, நேற்று காலை 6.50 மணியளவில் ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில், சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்டு சென்றார். அவருடன், அவரது செயலாளர், பாதுகாப்பு அதிகாரி, உதவியாளர் ஆகியோரும் சென்றனர். திடீர் அவசர பயணமாக டெல்லி சென்றுள்ள ஆளுநர், 3 நாள் டெல்லி பயணத்தை முடித்துவிட்டு, வரும் 19ம் தேதி மாலை 6.30 மணியளவில் டெல்லியில் இருந்து, ஏர் இந்தியா விமானம் மூலம் சென்னைக்கு திரும்புகிறார். ஆளுநர் ரவி, ஏற்கனவே கடந்த வாரம் 5 நாள் பயணமாக டெல்லி சென்றார். இந்நிலையில் அவர் மீண்டும் 3 நாள் பயணமாக, திடீரென டெல்லி புறப்பட்டு சென்றார். தமிழ்நாடு சட்டசபை தேர்தல் நடக்க இருக்கும் நிலையில், கவர்னர் அடுத்தடுத்து உடனடி பயணமாக, டெல்லி சென்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Tamil Nadu ,Governor R. N. Ravi ,Delhi ,Chennai ,Governor ,R. N. Ravi ,Air India ,
× RELATED கேரளாவில் தேர்தல் நெருங்கும்...