டெல்லி: அதிமுக கட்சி மற்றும் இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் கொடுக்கப்பட்ட மனு மீது எவ்வளவு காலத்தில் முடிவெடுக்க முடியும் என்று தேர்தல் ஆணையம் பதில் அளிக்க டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது. தேர்தல் ஆணையத்திற்கு எதிராக அதிமுக முன்னாள் நிர்வாகி புகழேந்தி தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் விசாரணை வரும் 23ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
