சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் தீர்ப்புக்கு எதிரான மனுக்களை 9 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்கும்: உச்சநீதிமன்றம் அறிவிப்பு!

டெல்லி: சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் தீர்ப்புக்கு எதிரான மனுக்களை விசாரிக்க புதிதாக 9 நீதிபதிகள் அமர்வு அமைக்கப்படும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. சீராய்வு மனுக்கள் மீது ஏப்.7 முதல் 22ம் தேதி வரை 9 நீதிபதிகள் கொண்ட புதிய அமர்வு விசாரிக்கும் எனவும் பெண்களை அனுமதிக்கும் தீர்ப்புக்கு எதிரான வாதங்களை ஏப்.7 முதல் 9ம் தேதி வரை முன்வைக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: