சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் மனு; புதிய 9 நீதிபதிகள் அமர்வு அமைக்கப்படும்: உச்சநீதிமன்றம் அறிவிப்பு

டெல்லி: சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் வழக்கு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெறவுள்ளது. சபரிமலை கோயிலில் பெண்களை அனுமதிக்கவேண்டும் என்று கடந்த 2018ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்திருந்தது. 2018ல் வழக்கு நடைபெற்றபோது 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரணை நடத்தி தீர்ப்பு அளித்திருந்தது. தீர்ப்பு வெளியான பிறகு தீர்ப்புக்கு ஆதரவாகவும், எதிராகவும் 67 சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதனை விசாரித்த உச்சநீதிமன்றம் 9 நிதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு வழக்கை விசாரிக்கும் என்று உத்தரவிட்டது. அதற்கான 7 அம்சங்களையும் அறிவித்தது.

அரசியல் சாசனப்பிரிவு 25, 26 உறுதி செய்துள்ள மத சுதந்திர உள்ளிட்ட அம்சங்கள் குறித்து முடிவு செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. தீர்ப்புக்கு இதுவரை தடை விதிக்கவில்லை, இந்த நிலையில், 7 ஆண்டுகளுக்கு பிறகு வழக்கு மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தது. தீர்ப்பு வழங்கிய 5 நீதிபதிகளில் தலைமை நீதிபதி சூர்யகாந்த் மட்டுமே பணியில் உள்ளார். மற்ற அனைவரும் ஓய்வு பெற்று விட்டனர்.

சீராய்வு மனுக்களை விசாரிக்க புதிதாக 9 நீதிபதிகள் அமர்வு அமைக்கப்படும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. ஏப்.7ம் தேதி முதல் சீராவு மனுக்களை 9 நீதிபதிகள் கொண்ட புதிய அமர்வு விசாரிக்கும் என்று அறிவிக்கப்பட்டது. பெண்களை அனுமதிக்கும் தீர்ப்புக்கு எதிரான வாதங்களை ஏப்.7 முதல் 9ம் தேதி வரை முன்வைக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

Related Stories: