விவசாயிகளை தவறாக வழிநடத்துகிறார்; வர்த்தக ஒப்பந்தங்கள் பற்றி ராகுல் பொய்களை பரப்புகிறார்: அமித் ஷா குற்றச்சாட்டு

சண்டிகர்: குஜராத் மாநிலம் காந்தி நகரில், இந்தியாவின் முதல் மத்திய வங்கி டிஜிட்டல் கரன்சி அடிப்படையிலான பொது விநியோக முறையை ஒன்றிய கூட்டுறவு அமைச்சர் அமித் ஷா நேற்று தொடங்கி வைத்தார்.

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் அமித் ஷா, “இந்திய விவசாயிகளை பாதுகாப்பது பற்றி ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் பேசுவதை பார்க்கும்போது எனக்கு சிரிப்பு வருகிறது. எப்போதும் நாட்டை தவறாக வழிநடத்தும் காங்கிரஸ் இப்போது வர்த்தக ஒப்பந்தங்கள் பற்றி பொய்களை பரப்பி வருகிறது. இங்கிலாந்து, ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்காவுடனான இந்தியாவின் வர்த்தக ஒப்பந்தங்கள் விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என ராகுல் காந்தியும், காங்கிரசாரும் பொய்களை பரப்பி விவசாயிகளை தவறாக வழிநடத்துகின்றனர்.

இந்த ஒப்பந்தங்கள் மூலம் இந்தியாவின் பால் பண்ணைத்துறையை மோடி முடித்து விட்டதாக ராகுல் சொல்கிறார். பால் உற்பத்திக்கு வழி வகுப்பவர்கள் நாங்கள்தான். அனைத்து ஒப்பந்தங்களிலும் பால் பண்ணைத்துறைக்கு முழு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள், கால்நடை வளர்ப்போரின் நலன்களில் ஒருபோதும் சமரசம் செய்ய முடியாது என்ற பிரதமர் மோடியின் உறுதியை இங்கே உங்களுக்கு தெரிவிக்க விரும்புகிறேன். பிரதமர் மோடியும், அவரது அரசும் ஒவ்வொரு ஒப்பந்தத்திலும் இந்திய விவசாயிகளின் நலன்களை பாதுகாப்பதை முழுமையாக உறுதி செய்துள்ளனர்” என்று தெரிவித்தார்.

Related Stories: