மணிப்பூரில் வன்முறை 30 வீடுகள் எரிந்து சேதம்

இம்பால்: மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி விலக்கப்பட்டு கடந்த 4ஆம் தேதி கெம்சந்த் சிங் தலைமையில் புதிய பாஜ அரசு பதவியேற்றது. இந்த நிலையில், மணிப்பூரில் மீண்டும் வன்முறை வெடித்தது. உக்ருல் மாவட்டம் லிட்டன் சரேய்கோங் கிராமத்திற்குள் புகுந்த ஒரு கும்பல் அங்கிருந்த ஒரு நபரை தாக்கியது. மேலும் வீடுகளுக்கு ஒரு கும்பல் தீ வைத்தது. இதில் 30-க்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்தன. ஆயுதம் ஏந்திய நபர்கள் அப்பகுதியில் பலமுறை துப்பாக்கிச் சூடு நடத்தியதால் பெரும் பதற்றம் நிலவுகிறது.

Related Stories: