கவுகாத்தி: அசாம் காங்கிரஸ் தலைவரும் எம்பியுமான கவுரவ் கோகாய்க்கு பாகிஸ்தான் உளவு அமைப்புடன் தொடர்பு இருப்பதாக அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார். இந்த நிலையில் இந்தியாவின் உள் விவகாரங்களில் பாகிஸ்தான் தலையீடுகள் குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழுவை(எஸ்ஐடி) அமைத்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. முதல்வர் ஹிமந்தா பிஸ்வா நேற்று நிருபர்களுக்கு பேட்டியளிக்கையில், நிருபர்கள் சந்திப்பில் கோகாய் தெரிவித்த 2 கருத்துக்களை சேர்க்கும் வகையில் எஸ்ஐடி அறிக்கையில் திருத்தம் செய்யப்படும். பாகிஸ்தானில் இருந்து நேரடியாக சம்பளம் பெற்றதாக கோல்பர்ன் கூறியுள்ளார். அதே போல் கோகாய் ராணுவ தலைமையகம் அமைந்துள்ள ராவல்பிண்டிக்கு செல்வது பற்றி கோகாயின் விசாவில் குறிப்பிடாதது குறித்தும் விசாரிக்க வேண்டும் என ஒன்றிய உள்துறை அமைச்சகத்துக்கு கோரிக்கை விடப்படும் என்றார்.
கோகாய் ராவல்பிண்டி பயணம் பற்றி விசாரணை: அசாம் முதல்வர் ஹிமந்தா கோரிக்கை
- Kokai
- ராவல்பிண்டி
- அசாம்
- ஹிமந்தா
- கவதி
- ஹிமந்த பிஸ்வா சர்மா
- அசாம் காங்கிரஸ்
- ஜனாதிபதி
- எம்பீத் கௌரவ் கோகாய்
- பாக்கிஸ்தான்
- இந்தியா
