ஆகாசா ஏர் நிறுவன இணை நிறுவனர் ராஜினாமா

புதுடெல்லி: ஆகாசா ஏர் நிறுவனம் கடந்த 2022ம் ஆண்டு தனது சேவையை தொடங்கியது. கடந்த சில மாதங்களுக்கு முன் நிறுவனத்தின் இணை நிறுவனரும் மூத்த துணை தலைவருமான நீலு காத்ரி ராஜினாமா செய்தார். இந்த நிலையில், இன்னொரு இணை நிறுவனரும் தலைமை வர்த்தக அதிகாரியுமான பிரவீன் ஐயர் நேற்று ராஜினாமா செய்தார். ஆகாசா ஏர் அதன் தலைமை தகவல் அதிகாரி ஆனந்த் ஸ்ரீனிவாசனை புதிய தலைமை வர்த்தக அதிகாரியாக நியமித்துள்ளது.

Related Stories: