திருமயம். பிப்.10: திருமயம் பகுதியில் பொதுமக்கள் இடையே துணிப்பை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பசுமை திருமயம் பசுமை தமிழ்நாடு என்ற முழக்கத்துடன் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. திருமயம் பகுதியில் இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி அறிவுறுத்தலின்படி பசுமை திருமயம் என்ற முழக்கத்துடன் பொதுமக்களுக்கு மஞ்சள் துணிப்பை வழங்கப்பட்டது.
