டெல்லி: ரம்ஜான், பக்ரித் பண்டிகைகளுக்கு மட்டுமே சிறப்பு தொழுகை நடத்த வேண்டும் என்ற நிபந்தனையை தளர்த்த வேண்டும் என இமாம் உசேன் என்பவர் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. திருப்பரங்குன்றம் நெல்லித்தோப்பு தர்காவில் ரம்ஜான், பக்ரித் அன்று மட்டுமே சிறப்பு தொழுகை என்பதை எதிர்த்து மனு அளிக்கப்பட்டது.
