டெல்லி: ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்ஸி உடன் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தொலைபேசியில் பேசியுள்ளார். ஈரான் மீதான தாக்குதலை அமெரிக்கா, இஸ்ரேல் தொடங்கிய 14 நாட்களுக்குள் 4வது முறையாக அப்பாஸ் உடன் ஜெய்சங்கர் பேசியுள்ளார். அமெரிக்கா, இஸ்ரேல் ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராக தன்னை தற்காத்துக்கொள்ள ஈரானுக்கு முழு உரிமையும் உள்ளது. வளைகுடா போரால் சர்வதேச மற்றும் வட்டார அளவில் ஏற்பட்ட சூழல் குறித்தும் அப்பாஸ் அரக்ஸி விவரித்தார்.
