டெல்லி: பெண்களின் வேலைவாய்ப்புகளை மோசமாக பாதிக்கும் எனத் தெரிவித்து, கட்டாய மாதவிடாய் விடுப்புக் கோரிய மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. மாநில அரசுகள் மாதவிடாய் விடுப்பு விதிகளை வகுக்க உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர் சைலேந்திர மணி திரிபாதி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு விசாரித்தது.
அப்போது பிறப்பித்த உத்தரவில், “அத்தகைய சட்டத்தை இயற்றினால் முதலாளிகள் பெண்களை வேலைக்கு அமர்த்த மாட்டார்கள். அவர்கள் ஆண்களை விட பலவீனமானவர்கள் என்ற பிம்பம் உருவாகக்கூடும்.இத்தகைய மனுக்கள் பயத்தை உருவாக்குவதற்காகவே தாக்கல் செய்யப்படுகின்றன. இதுபோன்ற சட்டம் வந்தால், ‘பெண்களைத் தாழ்ந்தவர்கள் என்று கூறி, மாதவிடாய் அவர்களுக்கு ‘மோசமான’ ஒரு நிகழ்வு என்று சொல்வார்கள். ஆகவே இந்த வழக்கை ஏற்க மறுக்கிறோம்,” இவ்வாறு தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்தனர்.
