டெல்லி: மக்களவை சபாநாயகர் மீது காங்., உள்ளிட்ட எதிர்க்கட்சி MP.,க்கள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர முடிவு செய்துள்ளனர். மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா ஒருதலைப்பட்சமாக நடந்து கொள்வதாக எதிர்க்கட்சிகள் புகார் தெரிவித்துள்ளனர். ஓம் பிர்லா மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவது குறித்து, கார்கே தலைமையில் ஆலோசனை நடைபெறுகிறது. ஆலோசனையில் ராகுல் காந்தி, டி.ஆர்.பாலு, துரை வைகோ உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
