டெல்லி : நாடாளுமன்றத்துக்கு மின்னஞ்சல் மூலம் மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மிரட்டலை அடுத்து நாடாளுமன்ற வளாகத்தில் மோப்பநாய்கள் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். காலிஸ்தான் தேசிய படை என்ற பெயரில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
