சாலை விபத்தில் இறந்த குடும்பத்திற்கு இலவச காப்பீடு திட்டத்தில் தலா ரூ.1 கோடி இழப்பீடு

*தெலங்கானா அரசு போக்குவரத்து கழகம் வழங்கியது

திருமலை : தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள அரசு போக்குவரத்து கழக பஸ் பவனில் சாலை விபத்தில் இறந்த 2 ஆர்.டி.சி. டிரைவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 கோடிக்கான காப்பீட்டு காசோலைகளை யூனியன் பாங்க் ஆப் இந்தியா நிர்வாக இயக்குனர் அம்ரேஷ் பிரசாத்துடன் இணைந்து ஆர்.டி.சி. துணைத்தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் ஒய். நாகி ரெட்டி வழங்கினார்.

இதில் நாகிரெட்டி பேசியதாவது: குஷைகுடா பணிமனையில் பணிபுரிந்த டிரைவர் வெங்கடேஷ் எனும் டிரைவர் காலையில் தனது வீட்டிலிருந்து குஷைகுடா டிப்போவிற்கு வேலைக்காக தனது பைக்கில் சென்று கொண்டிருந்தபோது, ​​கீசாரா அருகே எதிர் திசையில் இருந்து வந்த லாரி மோதியதில் படுகாயமடைந்தார்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் பலத்த காயமடைந்து இறந்தார். இதேபோல் உப்பல் டிப்போவைச் சேர்ந்த மற்றொரு டிரைவர் டி.ஆர்.கவுட், தனது 3 குடும்ப நண்பர்களுடன் மாருதி காரில் ஐதராபாத்திலிருந்து கனுகாபூர் (கர்நாடகா) நோக்கி அதிகாலையில் சென்றபோது, வேன் மோதியது.

இந்த விபத்தில், கவுட் மற்றும் 3 குடும்ப நண்பர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இரண்டு டிரைவர்கள் வெவ்வேறு நேரங்களில் நடந்த இந்த சாலை விபத்தில் இறந்தது வருத்தமளிக்கிறது. எந்தத் தவறும் செய்யாவிட்டாலும், டிரைவர்கள் சாலை விபத்தில் அகால மரணம் அடைந்தது துரதிர்ஷ்டவசமானது.

ஊழியர்களின் நலனுக்கு ஆர்.டி.சி அதிக முன்னுரிமை அளிக்கிறது. வாழ்வாதாரத்தை இழந்த குடும்ப உறுப்பினர்களுக்கு நிறுவனம் துணை நிற்கும் வகையில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் தங்கள் தன்னம்பிக்கையையும் தைரியத்தையும் இழக்காமல் இருக்க இலவச விபத்து காப்பீட்டு வசதி மிகவும் உதவியாக இருக்கிறது.

தேவைப்படும் நேரங்களில் சில திட்டங்கள் கைக்கு வரும் என்றும், இது இதற்கு ஒரு எடுத்துக்காட்டு என்றும், எந்த சூழ்நிலையிலும் அவற்றைப் பயன்படுத்துவதில் சோம்பேறியாக இருக்கக்கூடாது இந்த வாய்ப்பை வழங்கியதற்காக யூனியன் பாங்க் ஆப் இந்தியா வங்கிக்கு சிறப்பு நன்றி தெரிவித்தார். இதுபோன்ற பேரிடர் காலத்தில், யூ.பி.ஐ.வங்கியின் சூப்பர் சம்பள சேமிப்பு கணக்கு பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறது.

நிதி சலுகைகளுடன் கூடிய சூப்பர் சம்பள சேமிப்பு கணக்கை வைத்திருந்ததால், இலவச விபத்து காப்பீட்டுத் திட்டம் பொருந்தும். எனவே அனைத்து ஆர்.டி.சி. ஊழியர்களும் தாங்கள் வசிக்கும் பகுதிகளில் உள்ள யூனியன் பாங்க் ஆப் இந்தியா கிளைகளில் ஆர்.டி.சி. சுட்டிக்காட்டிய கணக்கைத் திறந்து ரூபே கார்டுகளைப் பெற்றால் இந்தக் கணக்கின் மூலம் இலவச விபத்து காப்பீட்டு வசதி வழங்கப்படும்.

இது ஊழியர்கள் ஏராளமான நிதிப் பலன்களைப் பெறலாம் விபத்துகளின் போது சூப்பர் சம்பள சேமிப்புக் கணக்கின் கீழ் யூ.பி.ஐ. வங்கி ரூ. 1 கோடியை வழங்குகிறது என்றார். இதில் செயல் இயக்குநர்கள் முனிசேகர், வெங்கண்ணா, நிதி ஆலோசகர் புஷ்பாகுமாரி, சி.பி.எம். உஷாதேவி, யூ.பி.ஐ. அதிகாரிகளின் முதன்மை பொது மேலாளர் ரவீந்திரபாபு, துணைப் பொது மேலாளர்கள் பாஸ்கர், சத்தியநாராயணா, கோபாலகிருஷ்ணா, ரஜ்னிஷ்குமார் பாண்டே உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Related Stories: