“PM CARES நிதி குறித்து கேள்வி எழுப்ப எம்.பி.க்களுக்கு அதிகாரம் இல்லை” – பிரதமர் அலுவலகம்

டெல்லி :“PM CARES நிதி குறித்து கேள்வி எழுப்ப எம்.பி.க்களுக்கு அதிகாரம் இல்லை”என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. மக்களவை செயலகத்திற்கு பிரதமர் அலுவலகம் எழுதியுள்ள கடிதத்தில், இந்திய அரசுக்கு சம்மந்தம் இல்லாத விஷயங்கள், அரசின் பொறுப்பின்கீழ் வராத அமைப்புகள், தனி நபர்கள் குறித்து கேள்வி எழுப்பக் கூடாது என்ற விதிகளை சுட்டிக் காட்டி, PM CARES, பிரதம மந்திரி தேசிய நிவாரண நிதி, தேசிய பாதுகாப்பு நிதி குறித்து கேள்வி எழுப்ப எம்.பி.க்களுக்கு அதிகாரம் இல்லை என தெரிவித்துள்ளது.

Related Stories: