மாஸ்கோ: ரஷ்யாவின் உஃபாவில் உள்ள மாநில மருத்துவ பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற தாக்குதலில் இந்திய மாணவர்கள் 4 பேர் காயமடைந்துள்ளதாக மாஸ்கோவில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. ரஷ்யாவின் பாஷ்கோர்டோஸ்தான் குடியரசில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் உள்ள வெளிநாட்டு மாணவர்கள் விடுதியின் விளையாட்டு அரங்கில் நுழைந்த 2 பேர் பல மாணவர்ளை சரமாரிய கத்தியால் குத்தி தாக்குதல் நடத்தியுள்ளனர், இதில் 4 இந்திய மாணவர்கள், உள்ளிட்ட பலர் காயமடைந்துள்ளனர்.
தாக்குதல் நடத்தியவர்களை போலீசார் கைது செய்ய முயன்ற போது ஏற்பட்ட மோதலில் 2 காவலர்கள் காயமடைந்தனர். மேலும் தாக்குதல் நடத்தியவர்கள் தாங்களே தங்கள் காயபடுத்திகொண்டர். இதில் 15 வயது சிறுவன் ஒருவன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளார்.
