சென்னை: தமிழ்நாட்டிற்கான ரயில்வே திட்டங்களுக்கு முழுமையான நிதியை உடனடியாக விடுவிக்க வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். நில எடுப்பு, இழப்பீடு வழங்குவதை விரைவுபடுத்திட ஏதுவாக தாமதமின்றி நிதி விடுக்க கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.
