உதகை பைகாரா ஏரியில் பெட்ரோல் படகுகளை இயக்க தடை

 

சென்னை: உதகை பைகாரா ஏரியில் பெட்ரோல், டீசல் படகுகளை இயக்க சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. படகு சவாரிக்கு பெட்ரோல், டீசல் படகுகளை இயக்குவதால் ஒலி மற்றும் நீர் மாசு அடைவதாக வழக்கு தொடரப்பட்டது. உதகை மத்திய மண், நீர் பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவன நிபுணர்கள் பைகாரா ஏரியை ஆய்வு செய்து அறிக்கை தர வேண்டும். கோவையில் சலீம் அலி பறவையியல் கல்வி நிறுவனமும் நிபுணர்களை அனுப்பி ஏரியை ஆய்வு செய்து அறிக்கை தர வேண்டும். பைகாரா ஏரியை ஆய்வு செய்து அறிக்கை தர உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஏப்.17ம் தேதிக்கு ஐகோர்ட் ஒத்திவைத்தது.

Related Stories: