விசில் அடிச்சா முன்னேற முடியாது: ஆரணி எம்பி அட்வைஸ்

 

சேத்துப்பட்டு: திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு, பழம்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் அரசு இலவச சைக்கிள்கள் வழங்கும் விழா நேற்று நடந்தது. இதில் ஆரணி எம்பி தரணிவேந்தன் பேசியதாவது: ஒரு மாணவன் வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைய நல்ல கல்வி, ஒழுக்கம், பண்பு ஆகிய மூன்றும் அவசியம். தமிழக அரசு வருங்கால தலைமுறையினரின் நலனுக்காக அடிப்படை கல்வி முதல் பட்டப்படிப்பு வரை பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

செய்யார் அரசு கல்லூரியில் நடந்த நிகழ்ச்சிக்கு சென்ற போது மாணவர்கள் விசில் அடித்து வரவேற்றனர். அப்போது நான் விசில் அடிக்காததால் தான் நாங்கள் மேடையில் இருக்கிறோம். விசில் அடித்த பலர் மேடையின் கீழே உள்ளனர். மாணவர்கள் இவ்வாறு நடந்து கொள்ளாமல் வாழ்க்கையில் முன்னேற வேண்டும். நான் அந்த விசிலை சொல்லவில்லை என்றார்.

Related Stories: