பிப்ரவரி 17ம் தேதி இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்கிறார்: சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு

சென்னை : சென்னை : பிப்.17ம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவை கூடுகிறது என்று சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். பிப்ரவரி 17ம் தேதி இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்கிறார். பிப்ரவரி 17ல் சட்டப்பேரவை கூடும் அன்றே இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து 2026-27 க்கான முன்பண மானிய கோரிக்கை, கூடுதல் செலவு மானிய கோரிக்கை 20 ஆம் தேதி வாசிக்கப்படும்.

இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர் அப்பாவு, இந்த இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் எத்தனை நாட்கள் நடைபெறும் என்பதை சட்டமன்ற கூட்டம் தொடங்கும் நாளுக்கு முந்தைய நாள் அதாவது 16ஆம் தேதி அலுவல் ஆய்வு குழு எனது தலைமையில் கூட்டப்பட்டு முடிவு செய்யப்படும். சட்டமன்ற நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்வது தொடர்பான பணிகள் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக நடைபெறும் கடைசி கூட்டத்தொடர் என்பதால் சில முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: