அம்மூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ஆர்.என்.ஆர் ரக நெல் அதிகபட்ச விலையாக ரூ.2,250க்கு விற்பனை

*ஒரே நாளில் 1,170 மூட்டைகள் குவிந்தது

ராணிப்பேட்டை : அம்மூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு நேற்று பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 1,170 நெல் மூட்டைகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.

இதில் 75 கிலோ எடைகொண்ட ஆர்.என்.ஆர் ரக நெல் மூட்டை அதிகபட்ச விலையாக ரூ.2,250க்கு விற்பனை ஆனது. அதன்படி, நெல் மூட்டைகளின் விற்பனை விலை விவரம் பின்வருமாறு: ஏடிடி 37 ரக குண்டு நெல் குறைந்தபட்ச விலையாக ரூ.1,369க்கும், அதிகபட்ச விலையாக ரூ.1,660க்கும் விற்பனை செய்யப்பட்டது.

கோ 51 ரக நெல் குறைந்தபட்ச விலையாக ரூ.1,449க்கும் மற்றும் அதிகபட்ச விலையாக ரூ.1,559க்கும், கோ 54 ரக நெல் குறைந்தபட்ச விலை மற்றும் அதிகபட்ச விலையாக ரூ.1,676க்கும், 606 ரக நெல் குறைந்தபட்ச விலை ரூ.1,642க்கும், அதிகபட்ச விலையாக ரூ.2,232க்கும், 1010 ரக நெல் குறைந்தபட்ச விலையாக ரூ.1,482க்கும், அதிகபட்ச விலையாக ரூ.1,556க்கும், ஆர்என்ஆர் ரக நெல் குறைந்தபட்ச விலையாக ரூ.1,519க்கும், அதிகபட்ச விலையாக ரூ.2,250க்கும் விற்பனையானது.

இதேபோல் ரித்திகா ரக நெல் குறைந்தபட்ச விலை மற்றும் அதிகபட்ச விலையாக ரூ.2,212க்கும், அமோகா ரக நெல் குறைந்தபட்ச விலையாக ரூ.1,589க்கும், அதிகபட்ச விலையாக ரூ.2,212க்கும், ஸ்ரீ ரக நெல் குறைந்தபட்ச விலை மற்றும் அதிகபட்ச விலையாக ரூ.2,186க்கும், வெள்ளை பொன்னி ரக நெல் குறைந்தபட்ச விலையாக ரூ.1,829க்கும் மற்றும் அதிகபட்ச விலையாக ரூ.1,849க்கும் விற்பனை செய்யப்பட்டது. விவசாயிகள் எடுத்து வரும் நெல் மூட்டைகள் விற்பனை செய்யப்பட்டு விவசாயிகளுக்கு வங்கியில் பணம் செலுத்தப்படுகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் விற்பனை கூடத்தில் ராகி அதிகபட்ச விலையாக ரூ.4,000க்கும், கருப்பு உளுந்து அதிகபட்ச விலையாக ரூ.7,450க்கு நேற்று விற்பனை செய்யப்பட்டது. கூடத்தில், பல்வேறு ரக நெல் மூட்டைகள் நல்ல விலைக்கு விற்பனை போவதால் விவசாயிகள் தங்கள் விலை நிலங்களில் அறுவடை செய்த நெல் மூட்டைகளை விற்பனைக்கு கொண்டு வரலாம் உன கண்காணிப்பாளர் சே.ராமமூர்த்தி தெரிவித்தார்.

Related Stories: