சென்னை: சென்னை விமான நிலையத்தில் கடத்திவரப்பட்ட ரூ.23 கோடி மதிப்புள்ள உயர் ரக கஞ்சா பறிமுதல் செய்தனர். தாய்லாந்திலிருந்து விமானம் மூலம் கடத்திவரப்பட்ட 23 கிலோ ஹைட்ரோபோனிக் கஞ்சாவை சுங்கத்துறை பறிமுதல் செய்தது. பதப்படுத்தப்பட்ட உணவு பொருள், சாக்லெட் பாக்கெட்டுகளுக்குள் மறைத்து கடத்தி வந்த கஞ்சாவை சுங்கத்துறை கைப்பற்றினர். கஞ்சாவை கடத்தி வந்த கேரளாவைச் சேர்ந்த 6 இளைஞர்களை கைது செய்து சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். தாய்லாந்தில் இருந்து சென்னைக்கு ரூ.15 கோடி மதிப்புள்ள 15 கிலோ உயர்ரக கஞ்சா கடத்திய 4 இளைஞர்கள் கைது செய்தனர்.
