சென்னை: தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்ட அறிக்கை: 2026 தேர்தலையொட்டி தமிழ் மாநில காங்கிரஸ் இயக்கத்தின் 4 மண்டலங்களில் போட்டியிட விரும்புவோரிடம் விருப்ப மனு பெறுவதற்கான கூட்டம் நடக்கிறது. பிப்.7ம் தேதி சனிக்கிழமை, மதுரை மண்டல கூட்டம் மதுரை, தமிழ்நாடு ஓட்டலிலும், 14ம் தேதி சனிக்கிழமை, கொங்கு மண்டல கூட்டம் கோயம்புத்தூர் – அவினாசி ரோடு – ஜெயம் மஹாலிலும், 17ம் தேதி செவ்வாய்க்கிழமை, சென்னை மண்டல கூட்டம் சென்னை ஓட்டல் அசோகாவிலும், 19ம் தேதி சனிக்கிழமை, டெல்டா மண்டல கூட்டம் திருச்சி, சத்திரம் பேருந்து நிலையம், ரெசிடென்சியிலும் நடைபெறுகிறது. அனைத்து மண்டல கூட்டங்களும் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது. விருப்ப மனு கொடுப்பவர்கள் பொது தொகுதிக்கு 1,000 ரூபாயும், தனி தொகுதிக்கு மற்றும் பெண்கள் 500 ரூபாயும் செலுத்தி, விருப்ப மனு கொடுக்க வேண்டும்.
