பாஜ முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை நேற்றிரவு மதுரையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: நான் இன்னும் விஜய்யையோ, டிவிகேவையோ அடிக்கவே ஆரம்பிக்கவில்லை. அடிக்க ஆரம்பிப்பேன். ஆனால், இன்னும் அடிக்க ஆரம்பிக்கலை. தமிழ்நாடு அரசியலில் நான் எப்போதும் மாற்றி பேசுவது கிடையாது. விஜய் மட்டுமின்றி அரசியலுக்கு புதியவர்கள் வரணும். எங்களோடு ஒருவர் கூட்டணி சேரவில்லை என்பதற்காக அப்படியே மாற்றி பேசமாட்டோம். அவரது பாதையில் அவர் போகட்டும். அதே நேரத்தில் டப்பா இன்ஜின் என சொன்னதற்கான பதிலடி நான் கொடுத்துவிட்டேன். டிவிகேவோ, விஜய்யோ, அவரது கட்சியில் உள்ள அல்லு, சில்லுகளை வைத்துக் கொண்டு வம்பிழுத்தார் என்றால் என்னுடைய பதிலும் மிகக் கடுமையாக இருக்கும். ஒரு எச்சரிக்கையாக கூட இதை அவங்க எடுத்துக் கொள்ளட்டும்.
அதே அளவுக்கு நானும் போவேன். விஜய் மீதே போவேன். அது அந்தளவுக்கு வேண்டாம். நாகரீகமான அரசியல் என விஜய் சொன்னதால் எனது பதிலும் நாகரீகமாக இருக்கிறது. இரண்டாம் கட்ட, மூன்றாம் கட்ட, நான்கு கட்சி மாறிவந்தவர்களை வைத்துக் கொண்டு ரொம்ப கீழே போக நினைத்தால், அதே விஜய்க்கு, அதே தவெகவிற்கு, அதே பாணியில் அதைவிட கீழே இறங்கி, அவர்களை விட சிறப்பாக என்னால் பதில் சொல்ல முடியும். அரசியல் களம் நாகரீகமாக இருக்கட்டும். அவர் பாதையில் அவர் போகட்டும். அவர் கருத்தை மக்கள் முன் வைக்கட்டும். விஜய் கைதட்டல் பெற வேண்டும் என்பதற்காக அவர்கள் கட்சிக்குள் பேசுகிறார். தொண்டர்களை விசிலடிக்க வைப்பதற்காக பேசியுள்ளார். சிந்திக்க வைக்க கூடிய அளவுக்கு அவரது பேச்சு இல்லை. எதற்கு ஓட்டுபோடனும், ஏன் மாற்று வேண்டும் என்பதற்கான பேச்சாக இல்லை. இவ்வாறு ெதரிவித்தார்.
* பதவி விலகியது ஏன்?
‘தேர்தல் பொறுப்பாளர் என்பது கட்சியின் அமைப்பு வேலை. இது ஆத்மார்த்தமான வேலை. அங்கேயே தங்கி இருக்கணும். இதற்கு நேரம் கொடுத்து செய்யணும். இப்ப நான் நேரம் கொடுக்க முடியாத சூழலில் இருக்கேன். அமைப்பு வேலையை கட்சி பார்த்துக் கொள்ளும். அரசியலில் இருந்து பின்வாங்கப் போவதில்லை. ஓபிஎஸ் உள்ளிட்ட யாரும் தனித்து விடப்படவில்லை. காலம் உள்ளது. பொறுத்திருங்கள். நல்லதாகவே நடக்கும்’ என்று அண்ணாமலை தெரிவித்தார்.
