சென்னை: நினைவுநாளில் மட்டுமல்ல, ஒவ்வொரு நாளும் அண்ணனை நினைக்கும் நாள்தான் எங்களுக்கு என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். ஆண்டுகள் எத்தனை ஆனாலும், தமிழ்நாட்டை அண்ணாதான் ஆள்கிறார். பா.ஜ.க. அரசின் ஆணவத்துக்கும் ஆதிக்கத்துக்கும் அண்ணாவின் தமிழ்நாட்டில் கெட் அவுட் தான் என முதல்வர் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
