திருவனந்தபுரம்: கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் செறுதுருத்தி அருகே உள்ள முள்ளூர்க்கரை பகுதியைச் சேர்ந்தவர்கள் தேவகி (83), ஜானகி (80) மற்றும் சரோஜினி (75). சகோதரிகளான இவர்கள் யாரும் திருமணம் செய்து கொள்ளவில்லை. ஒரே வீட்டில் தான் இவர்கள் வசித்து வந்தனர். தங்களை கவனிக்க யாருமில்லையே என்று இவர்களுக்கு மனவருத்தம் இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று சகோதரிகள் மூன்று பேரும் நேற்று விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டனர்.
