தாய்லாந்து: பாங்காக் அருகே ஓடும் ரயில் மீது கிரேன் விழுந்த விபத்தில் பலி எண்ணிக்கை 29ஆக உயர்ந்தது. அதிவேக ரயில் சேவைக்காக கட்டப்பட்டு வந்த பாலத்தில் இருந்த கிரேன், கீழே சென்ற ரயில் மீது விழுந்தது. பாலத்தில் கான்கிரீட் இணைப்புக்காக பயன்படுத்தப்படும் கிரேன் விழுந்ததில் ரயில் தடம் புரண்டு தீப்பிடித்தது. ரயில் மீது கிரேன் விழுந்த விபத்தில் படுகாயம் அடைந்த 80க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
