×

அதிமுக பொதுச்செயலாளராக தேர்வு செய்த விவகாரம் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான வழக்கு உச்ச நீதிமன்றம் தள்ளுபடி

புதுடெல்லி: இரட்டை இலை சின்னம் அதிமுக அதேபோன்று எடப்பாடி பழனிச்சாமியை அக்காட்சியின் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டது ஆகியவைக்கு எதிராக தேர்தல் ஆணையம் மற்றும் டெல்லி உயர் நீதிமன்றம் ஆகியவற்றில் தொடரப்பட்ட வழக்கு தொடரப்பட்டது. கடந்த 2022 ஜூலை 11ம் தேதி நடந்த பொதுக்குழு கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி அறிவிக்கப்பட்டதை எதிர்த்தும், அதேபோன்று பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்தும் திண்டுக்கல்லை சேர்ந்த சூரியமூர்த்தி என்பவர் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமி தாக்கல் செய்த மனுவை உரிமையியல் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதற்கு எதிராக எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், உரிமையியல் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை கடந்த செப்டம்பர் 4ம் தேதி நிராகரித்தது. மேற்கண்ட உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக சூரியமூர்த்தி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்திருந்தார். அதில்,‘‘தன்னை அதிமுக கட்சியின் உறுப்பினர் கிடையாது இந்த வழக்கை தாக்கல் செய்ய அவருக்கு உரிமை இல்லை என்று கூறப்பட்டதில் எந்தவித முகாந்திரமும் இல்லை. இது சட்ட விதிகளுக்கு முரணானது ஆகும். எனவே அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்த விவகாரத்தில் உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு தடைவிதித்து அதனை ரத்து செய்ய வேண்டும் ’’ என்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் மேற்கண்ட மனுவானது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்மா மற்றும் அலோக் அராதே ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில்,‘‘இரட்டை இலை சின்னம் அதேப்போன்று அதிமுகவின் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டது தொடர்பாக எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில் நாங்கள் தலையிட்டு எந்தவித உத்தரவும் பிறப்பிக்க விரும்பவில்லை எனவே மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்யப்படுகிறது’’ எனக்கூறி வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

Tags : Supreme Court ,Edappadi Palaniswami ,AIADMK ,New Delhi ,Election Commission ,Delhi High Court ,general secretary ,
× RELATED பருந்துகளுக்கு 1270 கிலோ போன்லெஸ் சிக்கனை வீச டெல்லி அரசு திட்டம்!