வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ் பிளாஸ்டிக்ஸ் தொழில் நுட்ப திறன் பயிற்சி வகுப்பில் சேர விண்ணப்பிக்கலாம்: சென்னை ஆட்சியர் தகவல்

 

சென்னை: வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ் பிளாஸ்டிக்ஸ் தொழில் நுட்ப திறன் பயிற்சி வகுப்பில் சேர்வதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; சென்னை மாவட்டத்தில் உள்ள மத்திய பெட்ரோகெமிக்கல்ஸ் பொறியியல் மற்றும் தொழில் நுட்ப கல்வி நிறுவனம் (CIPET), பிளாஸ்டிக்ஸ் தொழில் நுட்ப பயிலகம் (IPT) தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக்கழகத்துடன் இணைந்து வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ் 100% வேலைவாய்ப்புடன் கூடிய கட்டணமில்லா பிளாஸ்டிக்ஸ் தொழில் நுட்ப திறன் பயிற்சி வகுப்பில் சேர்வதற்கான இணையம் வழியே விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Machine Operator Plastics Processing; Machine Operator Plastics Injection Moulding; Machine Operator and Programmer Plastics CNC Milling போன்ற இப்பயிற்சி வகுப்புகளில் 2 மாதங்கள் பயிற்சி பெற குறைந்த பட்சம் 8ம் வகுப்பில் இருந்து பட்டப்படிப்பு முடித்த ஆண்கள் பெண்கள் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு 18 முதல் 35 வயது வரை இருக்க வேண்டும்.

தகுதிகள்
31.12.2025 அன்று விண்ணப்பதாரர் 18 வயது நிறைவு செய்து இருக்க வேண்டும்.
குறைந்த பட்சம் 8 ஆம் வகுப்பு தகுதியுடையவராக இருக்க வேண்டும்.
தொழில் பயிற்சி பெற வேண்டுவோர் இப்பயிற்சியில் சேரலாம்.
வேறு எந்த தொழில்பயிற்சி நிலையங்கள் மூலம் பயிற்சி பெறாதவராய் இருத்தல் வேண்டும்.
புதிய தொழில் துவங்குவோரும் இப்பயிற்சியில் சேரலாம்.

பயிற்சியில் சேர அசல் மற்றும் நகல் ஆவணகள் சமர்ப்பிக்க வேண்டும்.
8ஆம், 10ஆம் அல்லது 12ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் (அசல்).
பள்ளி பரிமாற்ற சான்றிதழ் நகல், சாதி சான்றிதழ் நகல் மற்றும் ஆதார் அட்டை (நகல்).
வங்கி கணக்கு புத்தகம் (நகல்) மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள்(5).
பயிற்சி கட்டணம், உணவு மற்றும் தங்குமிடம் இலவசம்.
அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ் உதவித்தொகையும் வழங்கப்படும்.

இப்பயிற்சி வகுப்புகளில் சேர விருப்பமுள்ளவர்கள் https://candidate.tnskill.tn.gov.in/skillwallet/ தங்கள் விவரங்களை பதிவு செய்யவும். செய்யவும். மேலும், விபரங்களுக்கு 9940188582 / 9841126297 / 7598145203 என்ற எண்களை தொடர்பு கொள்ளவும். சென்னை மாவட்டத்தை சேர்ந்த தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் இப்பயிற்சி வகுப்புகளில் சேர்ந்து பயன்பெறுமாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Related Stories: