சென்னை: ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு எதிராக வழக்கு தொடர அனுமதி பெறுவதில் ஏற்பட்ட தாமதம் வேண்டுமென்றே ஏற்பட்டதல்ல. ஆவணங்களை மொழிபெயர்ப்பது உள்ளிட்ட நடைமுறைகள் காரணமாகவே தாமதம் ஏற்பட்டது என முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்கு தொடர்பாக தமிழ்நாடு அரசு விளக்கமளித்துள்ளது. எஸ்.பி.வேலுமணி மீதான வழக்கின் விசாரணையை ஜனவரி 20ம் தேதிக்கு ஐகோர்ட் ஒத்திவைத்தது.
