புதுடெல்லி: 1983ல் இந்தியக் குடியுரிமை பெறுவதற்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பே வாக்காளர் பட்டியலில் தனது பெயர் சேர்க்கப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை விசாரிக்க மறுத்த மாஜிஸ்திரேட்டின் உத்தரவை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்குப் பதிலளிக்க, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு டெல்லி நீதிமன்றம் பிப்ரவரி 7 வரை அவகாசம் வழங்கியது.
நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, சோனியா காந்தியின் வழக்கறிஞர் பதில் மனு தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம் கோரினார். அதைத் தொடர்ந்து, நீதிமன்றம் அடுத்த விசாரணைத் தேதியான பிப்ரவரி 7 வரை அவகாசம் வழங்கியது.
