உத்தரப்பிரதேசம்: உத்தரப் பிரதேசத்தின் புலந்தசாஹரில் உள்ள ஆன்லைன் வணிக நிறுவனத்தின் சரக்குக் கிடங்கில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். பதஞ்சலி நிறுவன நெய் மீதான புகாரை அடுத்து சரக்குக் கிடங்கில் சோதனை நடத்தியதாக உ.பி. அதிகாரி பேட்டி அளித்துள்ளார். பதஞ்சலி நெய் தரமற்றதாக உள்ளதாக வந்த புகாரை அடுத்து உ.பி. உணவுத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
