மதுரை: மது அருந்தும் இடங்களுக்கு குழந்தைகளை அழைத்துச் செல்லப்படுவதாக புகார் வந்தால், உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டது. புத்தாண்டு கொண்டாட்டங்களில் மது அருந்தும் இடங்களுக்கு குழந்தைகளை அழைத்துச் செல்லக் கூடாது. நட்சத்திர விடுதிகள், உணவு விடுதிகளில் மதுபானம் அருந்தும் இடத்துக்கு குழந்தைகளை அழைத்து செல்லக் கூடாது. திருவேற்காட்டைச் சேர்ந்த எம்.காமேஷ் என்பவர் தாக்கல் செய்த வழக்கில் ஐகோர்ட் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
