சென்னை: பொருநை அருங்காட்சியகத்தை சீர்மிகு சிறப்புடன் அமைத்துள்ள முதலமைச்சருக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு இதயம் நிறைந்த நன்றி தெரிவித்துள்ளார். நீண்ட இந்தப் பயணத்தை என் வாழ்வில் கிடைத்த மிகப்பெரும் பெருமையாக உணர்கிறேன். பல தலைமுறைகளைக் கடந்து நம் வரலாற்றை கொண்டு செல்கிறது பொருநை அருங்காட்சியகம் என தெரிவித்தார்.
