×

34 ஆண்டுகளுக்கு பிறகு ஏ.ஆர்.ரஹ்மானை பிரிகிறார் மணிரத்னம்

சென்னை, மார்ச் 19: 34 ஆண்டுகளில் முதல் முறையாக ஏ.ஆர்.ரஹ்மான் இல்லாமல் தனது படத்தை உருவாக்க இருக்கிறார் மணிரத்னம். 1992ல் ‘ரோஜா’ படம் மூலம் ரஹ்மானை அறிமுகப்படுத்தினார் மணிரத்னம். அப்போது முதல் கடைசியாக மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த ‘தக் லைஃப்’ படம் வரையும் ரஹ்மான்தான் இசையமைத்து வருகிறார். இந்நிலையில் மணிரத்னம் இயக்கும் புதிய படத்தில் விஜய் சேதுபதி, சாய் பல்லவி நடிக்கிறார்கள். இந்த படத்தில் ரஹ்மான் இசையமைக்க மாட்டார் என சினிமா வட்டாரத்தில் பரவலாக பேசப்படுகிறது. அவருக்கு பதிலாக சாய் அபயங்கர் இந்த படத்துக்கு இசையமைப்பார் என்றும் சொல்லப்படுகிறது. ‘டியூட்’ படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான சாய் அபயங்கர், அடுத்ததாக சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அல்லு அர்ஜுன், அட்லீ இணையும் படம், சூர்யாவின் ‘கறுப்பு’, தனுஷ், லீலா நடிக்கும் படம், சிம்புவின் புதிய படம் உள்பட பல படங்களுக்கு இசையமைக்கிறார்.

Tags : Mani Ratnam ,A.R. Rahman ,Chennai ,Rahman ,Vijay Sethupathi ,Sai Pallavi ,
× RELATED நோராவின் ஆபாச நடனத்தால் சர்ச்சை;...