×

ஜூலை 31ல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

 

கோவை, ஜூலை 24: கோவை மாவட்டத்தில் விவசாயிகளின் பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் வரும் 31ம் தேதி காலை 9.30 மணிக்கு வேளாண்மை உற்பத்திக்குழு கூட்டம், காலை 10.30 மணிக்கு விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடத்தப்பட உள்ளது.
மாவட்ட விவசாயிகள் இந்த விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் நேரடியாக கலந்து கொண்டு விவசாயம் தொடர்பான தங்களது பிரச்சனைகளுக்கு தீர்வு காணலாம். வேளாண் திட்டங்கள் குறித்து இதில், விவசாயிகளுக்கு பல்வேறு தகவல்கள் தெரிவிக்கப்படும்.

 

Tags : Coimbatore ,Production Committee ,Coimbatore district ,
× RELATED மாநகரில் கடந்த ஒரு வாரத்தில் மதுபோதையில் வாகனம் ஓட்டிய 855 பேர் மீது வழக்கு