×

தாய்லாந்து சிலம்பம் போட்டியில் கோவை சகோதரர்கள் 3 தங்கம் வென்று அசத்தல்

 

கோவை,ஆக.3: தாய்லாந்து நாட்டில் நடந்த சர்வதேச சிலம்பம் போட்டியில் கோவை சேர்ந்த சகோதரர்கள் 3 தங்கம், ஒரு வெள்ளி வென்று அசத்தியுள்ளனர். தாய்லாந்து நாட்டின் பட்டாயா நகரில் கடந்த ஜூலை 28 முதல் 31 வரை 18-வது எஸ்ஜிஏடிஎப் சர்வதேச சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது. இப்போட்டி “இளைஞர்களை வலுப்படுத்துதல், எதிர்காலத்தை வலிமையாக்குதல்” என்ற நோக்கத்துடன் நடைபெற்றது. இந்த சர்வதேச போட்டியில் பல்வேறு நாடுகளில் இருந்து வந்திருந்த விளையாட்டு வீரர்கள், கராத்தே,சிலம்பம், யோகா, கால்பந்து, செஸ் ஆகிய 5 விளையாட்டுகளில் பங்குபெற்றனர்.

இதில், வருண் முத்துராஜ் ஒற்றை கம்பு,கம்புச்சண்டை ஆகிய போட்டியில் 2 தங்க பதக்கமும் மற்றும் தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கும் தருண் முத்துராஜ் கம்புச்சண்டையில் ஒரு தங்கமும்,சுருள்வாள் போட்டியில் ஒரு வெள்ளி பதக்கமும் பெற்றார்.சர்வதேச போட்டியில் வென்ற வருண் மற்றும் தருண் சகோதர்களுக்கு பொதுமக்கள் மற்றும் விளையாட்டு ஆர்வலர்கள் பலர் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.

Tags : Coimbatore ,Thailand ,Silambam ,18th SGATF International Silambam Competition ,Pattaya, Thailand ,
× RELATED மாநகரில் கடந்த ஒரு வாரத்தில் மதுபோதையில் வாகனம் ஓட்டிய 855 பேர் மீது வழக்கு